பள்ளியகரம் நீ. கந்தசாமிப் புலவர்

பள்ளியகரம் நீ. கந்தசாமிப் புலவர் (9 சூன் 1898 - 18 சூன் 1977) ஒரு தமிழ்நாட்டுப் புலவர் ஆவார்.

தொடக்க வாழ்க்கை

தொகு

தஞ்சையின் புறநகர்ப் பகுதியில், தற்பொழுது பள்ளியக்கிரகாரம் என்று வழங்கப்படும் பள்ளியகரம் என்னும் ஊரில் பிறந்தார். அவர் தந்தையார் நீலமேகம் பிள்ளை; தாயார் சௌந்தரவல்லி அம்மையார்.

படிப்பு

தொகு

பள்ளி இறுதி வகுப்பு பயின்ற அவர், தன் சொந்த முயற்சியாலும், பல்வேறு அறிஞர் பெருமக்கள் தொடர்பாலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். மேலும் அவர் தாமே முயன்று ஆங்கிலம், பிரான்சியம், இலத்தீன், வடமொழி ஆகிய மொழிகளைக் கற்றுப் புலமை மிக்கவராகத் திகழ்ந்தார்.

இலக்கியப் பங்களிப்பு

தொகு

கரந்தைத் தமிழ்த் சங்கத்தில் பல ஆண்டுகள் அமைச்சராக விளங்கினார். ஆங்கிலத்திலும் தமிழிலும் பல நூல்களை படைத்துள்ளார். ஆங்கிலேயக் கவிஞர் தாமஸ் கிரே எழுதிய தமிழில் செய்யுள் வடிவில் இரங்கற்பா என்னும் தலைப்பில் மொழி பெயர்த்துள்ளார்.

மறைவு

தொகு

கந்தசாமிப் புலவர் 18 சூன் 1977 அன்று தன் 80-ஆம் அகவையில் காலமானார்.